திங்கள், அக்டோபர் 15, 2018

துயரத்தின் படம்

ஒரு அழுகை எப்படியிருக்க வேண்டுமென 
உங்கள் மனதில் ஒரு சித்திரம் இருக்கிறது
கற்பனையாகவோ
கற்பிதமாகவோ
ஒரு துளி கண்ணீர் 
அக்கோட்டிற்கு 
சாய்கோணத்தில் இறங்குவதை 
உங்களால் சகிக்க இயலாது
என்றாலும்
துயரத்தின் படம் வரைந்து பாகம் குறித்த
 உங்கள் தாளை
எப்படித்தான் ஒவ்வொருவரிடமும் நீட்டுவது


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...