திங்கள், அக்டோபர் 15, 2018

பிரிவுழலுதல்


இவ்வளவு காலமிலாது 
மகுடேசுவரனிடம் 
யாரோ இப்போது ஏன் கேட்கவேண்டும்
இவ்வளவு காலமிலாது
மனுஷ்யபுத்திரன் இப்போது
ஏன் இதை எழுதவேண்டும்
நழுவிச்செல்லும் காலக்கோட்டில் 
இவை ஏன் தவறாது என் மனதுக்கு வரவேண்டும்
பிரிவுழல்தல் என்பது
என்றாவது சந்தித்துவிடக்கூடிய
உறவின் தற்காலிகப் பிரிவு
தற்காலிகச் சோகம் என்று அறிவு 
ஏன் கோனார்உரை புரட்டவேண்டும்
நிகழ்தகவில் தப்பாத 
இவற்றையெல்லாம் 
மறதியின் இழுப்பறையில் பூட்டுவதா
புறக்கணிப்பின் புகைபோக்கிவழி வெளியேற்றுவதா
சுருணைத்துணியால் 
வெற்று மேசையைத் துடைக்கிறேன்
கவனமின்றி அதனாலேயே கண்ணீரையும்
பிறகு பார்த்தால் 
அது உன் பழைய வேட்டித்துணி

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...