செவ்வாய், அக்டோபர் 23, 2018

தோடுடைய செவியன்

உணர்வின் குமிழில் தப்பித்தப்பி 
ஆடும் வண்ணங்களைக் கணக்கெடுக்க 
தலைசாய்த்தும் குழைந்தும் 
நிமிர்ந்தும் நின்றாடுகிறாள்
தோடுடைய செவியனோ தோட்டைத்தொட்டு சிரிக்கிறான்
நர்த்தனம் நர்த்தனம்
இடைவிடா நர்த்தனம்
குமிழ்கள் உடைந்து பறக்கின்றன
புதிய குமிழ்கள் எழும்பி எழும்பி வரவர 

நர்த்தனம் நர்த்தனம்
இடைவிடா நர்த்தனம்
இடையில் ஆரண்யத்தின் 

முறுக்கேறிய கொடிகள் காய்ந்து கிடக்க 
குமிழ்களைக் கைவிட்டு
சுள்ளிகளைச் சேர்த்தெடுக்கிறாள்
தோடுடைய செவியனே
அவளுக்கு உன் திருவோடு நினைவுக்கு வந்துவிட்டது






கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...