செவ்வாய், அக்டோபர் 23, 2018

இருவண்ணக்கிளி

அந்தக்கிளி
வெளியில் நின்று புரளும் 
உண்மைக்கண்ணீரில் இருக்கிறது
அந்தக்கிளி
எங்கோ ஒலிபரப்பாகும் வசனத்தில் இருக்கிறது
அந்தக்கிளி
இன்னும் வாசிக்காது சேர்ந்திருக்கும் 
நூல்களின்மேல் உட்கார்ந்திருக்கிறது
அந்தக்கிளி
எழுதி முடிக்காத 
உடன்பிறப்பு மடல்களுக்குள் 
உறங்கிக்கொண்டிருக்கிறது
ஒரு கறுப்புக்கண்ணாடியும் மஞ்சள்துண்டும் 
வைக்கப்பட்ட அலமாரியிலும்
இப்போதைக்கு ஒதுங்கியிருக்கும் 
சக்கர நாற்காலி இருக்கையிலும்
ஏதோ ஓர் இழுப்பறையில்
இருக்கக்கூடிய 
கல்லக்குடி கண்ட கருணாநிதி வாழ்கவே 
என்ற ஹனீபா குறுந்தகட்டிலும்
இருவண்ணக்கொடியிலும்
சமூகநீதிச்சட்டவரிகளிலும் 
இருக்கலாம் அந்த உயிர்க்கிளி
என்றும் இருக்கும் அப்படியே

கலைஞரின் உடல்நலம் குன்றியிருந்த இறுதிநாட்களில் ஜூலை 30ல் எழுதியது 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...