வியாழன், டிசம்பர் 09, 2021

நனைதலும் காய்தலும்

     சன்னலுக்கு வெளியே விரியும் தெரு

டைனோசரின் எலும்புக்கூடுபோல
அசைவின்றி கிடக்கிறது
நிசப்தமும் அசைவிலா நிலையும்
என்னை மட்டும் தொந்தரவு செய்யவில்லை
என உணர்ந்தபோது
நானும்
....கொண்டேன்
வௌவ். ...வௌவ்.
************************************************

உன்னைத் தெரியாதா
எனச்சிரிப்பவரை
உன்னைத்தான்
தெரியுமே
எனக்கெக்கலிப்பவரை
உன்னால் என்ன முடியும்
என ஏகடியம் செய்பவரை
உன் இடம் இதுதான்
என கோடு கிழிப்பவரை
திரும்பிய திசையெலாம் பார்க்கிறேன்
நனைதலும் காய்தலும் அவரவர் தேர்வு
மழைவெளிக்கு
உழக்குப்படியோடு வந்துநிற்காதீர்





கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...