ஞாயிறு, டிசம்பர் 05, 2021

நலவிசாரிப்புத் தேனீர்

 புதியதொரு

தேயிலைத்தூள் பெட்டியைத் திறந்தேன்
மெல்லக் கால்பதித்து அட்டை உடைந்துவிடாதபடி
தூளுக்குள் புதைந்துகொண்டேன்
வெண்கொழுந்து தொடங்கி
முற்றி
முக்காடிட்ட பெண்ணின் முதுகுக்கூடைக்குள்
லாவகத்தோடு விசிறப்பட்ட தருணம் வரை
வளர்ந்தேன்
வெயில் குடித்தேன்
பனி உறிஞ்சினேன்
மழைப்பெருக்கைக்
காலில்எத்தி எத்தி இறக்கிவிட்டேன்
முறுகப்பரத்தி வைத்த அனல்கூட்டினுள்
ஓடிக்கொண்டிருக்கையில்
உன்னைக்கண்டேன்
நலந்தானே
என்றது தேத்தூள்
நெஞ்சாரத் தலையசைத்தேன்
வாருங்கள்
ஒருகோப்பைத் தேநீர் பருகுவோம்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...