திங்கள், டிசம்பர் 06, 2021

கும்பிடு சாமிகள்

 நாங்க கும்பிட நிறைய சாமி உண்டு

சமயத்துல
அது மரத்தடியில நின்னுக்கும்
சமயத்துல ஆத்தங்கரை
குளத்தங்கரை
நடுக்காடு
மொட்டைவெயில் கூரைகூட கேட்காமல்
போறப்ப வர்ரப்ப
வைக்குற பொங்கலுக்கும்
எப்பயாச்சும் வெட்டற ஆடு கோழிக்கும்
என்னிக்கோ போடுற முதல்மொட்டைக்கும்
கணக்கு பாக்காம
காலம் பூரா காப்பாத்துற
எக்கச்சக்க சாமி உண்டு
முக்கியமா
எதையும் உடைக்கச் சொல்லாம
கோடி கோடியா வசூல் பண்ணச் சொல்லாம
அதது பாட்டுக்கு நிக்குது
எப்பவாச்சும் பாக்குறது
போதாதுன்னுதான்
போன நூற்றாண்டு
சாமிகளுக்கும்
தெருத்தெருவா சிலை வைச்சோம்
உலகம் அந்த சாமிகளை
அம்பேத்கர், காந்தி,நேரு,
பெரியார் அண்ணா'னு
கூப்பிடுது
தலைமுறையக் காப்பாத்த வந்த
இந்த சாமிங்க
சூடம் சாம்பிராணி கேக்குறதுல்ல...
பசிக்கிற வயித்துல விழுற பழைய சோறுகூட
அவங்களுக்குப்
படையல்தான்
கண்ணைத் தொடச்சுவிடவே கண்திறந்த சாமிகளை
இப்ப
கண்டா வரச்சொல்லுங்க

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...