ஞாயிறு, டிசம்பர் 05, 2021

உதறிப்போட்டவை

 நினைவுகளுக்கும்

நிகழ்வுகளுக்கும்
இடையேதான் தொங்குகிறதா
மாமர ஊஞ்சல்
ஒரு நேரம்
உந்தித்தள்ள யாராவது நிற்கிறார்களா என்று ஏக்கம்
ஒரு நேரம்
கயிற்றை அண்ணாந்து பார்த்தபடி ஒரு தயக்கம்
காற்று ஏளனமாகப் பார்க்கிறதா என்ன
*****************************************************
நீ இல்லை
ஆனாலென்ன உன்னைப்பற்றிச்
சொல்லிக் கொண்டிருக்கிறேன்
நீ
எப்படி இல்லாமற் போவாய்
பார்க்கிறேன் *********************************************
உடம்பு உதறி உதறிப்போட்ட
தருணங்களையெல்லாம்
சர்வசாதாரணமாகக்
கதை மாதிரி சொல்வது
எதில் சேர்த்தி
************************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...