ஞாயிறு, டிசம்பர் 05, 2021

என் நிறம் என்ன

  இலை நுனி தாண்டும்வரை

உலகம் பச்சையாகத்தான் இருந்தது
பனித்துளிக்கு
***********"*"

 தன் நிறம் பச்சையென்றே தளும்பிக்கொண்டிருந்த
பனித்துளிக்கு
விழுந்தபின்
குழப்பமில்லை
***†********
ஆற்றின்துளிக்கு
அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம்
தோன்றும் தானும் ஒருநாள்
 நீலமாகிவிடுவோம் என
*********"********
 சடசடத்து இறங்கும் பொழுதில்
செம்புலம்தான் சேர்கிறோமா
எனச் சிந்திக்கும் அவகாசமில்லை
*********************
 பொத்தல் கூரைக்கடியில் காத்திருந்து ஏந்திக்கொள்ளும்
ஒடுக்குவிழுந்த அலுமினியக்கிண்ணம்
அத்தனை கதகதப்பாகிறது
குளிர்துளிக்கு
*******************
 யாரும் பார்க்கவில்லையென 
உறுதிப்படுத்தியபடி
ரகசியமாகக் கைநனைத்துக் களிக்கும்
பிஞ்சுக்கரம் தொடுகையில் 
குழம்பிவிடுகிறது மழை
அனுப்பிய தேவன்
தனக்குமுன் இறங்கி விட்டானோ என
**************""*"
 வேலையற்றுப்போன நாளில்
ஊர்மந்தையில் சுருண்டிருப்பவன் போல
ஆண்டின் பாதிநாள்
எங்கு கிடக்கும் மழை

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...