வியாழன், டிசம்பர் 09, 2021

மாயப்பூட்டின் இரண்டு பக்கங்கள்

     இப்போது என்றில்லை

எப்போதுமே
உன் பார்வைக்கும்
என் பக்குவத்துக்கும் இடையே தொங்குகிறது ஒரு மாயப்பூட்டு
ஏழு கடல் ஏழு மலைக்கப்பால்
ஒரு கழுகு காத்திருக்கும் குகைக்குள் கிடக்கும் சாவியைத் தேடிப்போகும் நீ
ஒருமுறை
பச்சைக்கிளி வழி தொலைந்துபோனாய்
அடுத்த பிறவியிலோ
ஏழாங்கடலின் கரையில்
சங்கு பொறுக்கப்போனாய்
இப்படியே
மலைவேம்பின் பழம் உலுக்கி
எண்ணிக்கை தவறி
எட்டாம் மலை ஏறி என்றே போகின்றன உன் பயணங்கள்
பூட்டுக்கு இந்தப்பக்கம்
கழுகு கழுகு என்று நினைவூட்டியபடியே நான் காத்திருக்கிறேன்




கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...