ஞாயிறு, டிசம்பர் 05, 2021

வேண்டுதல் வேண்டாமை

 பழைய ஊறுகாய் பாட்டிலில் எண்ணெயும் தெருவாசல் அரளியுமாகப் பதினோரு சுற்று சுற்றிவருவதன் மூலம் அவள் பிறவிப்பெருங்கடல் தாண்ட விரும்பியதில்லை

பிள்ளைகளின் மதிப்பெண் கூடுவது
கணவனின் சர்க்கரை குறைவது
வீட்டுக்கடனை
ஒழுங்காக அடைக்க முடிவது
வண்டி நொடிக்கும் நேரத்தில்
பிரேக் போடும் மாயம் மட்டுமே வேண்டுவாள்
தொகுதிப் பிரமுகர் போலக் கோரிக்கை மனுவை
படித்துப் பார்க்காமல்
குப்பைத் தொட்டியில் போட்டுவிட்ட சமயங்களில் கூட
அவள் கடவுளுக்கு
மறுவாய்ப்பு கொடுப்பாள்
கதவைச் சாத்திக்கொண்டு அழிச்சாட்டியம்
பண்றியா
காப்பித்தூளுக்கு
வெந்நீர் ஊற்றியபடி
கேள்வி கேட்கிறாளே
இப்போது இந்த ஃபில்டரும் தெய்வம்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...