ஞாயிறு, டிசம்பர் 05, 2021

என்பேர் வயசு

 முதல்வேலையாக

கரவுசரவாக இருந்த திடம் குலைக்கிறது
சுத்தியலை வாய்ப்பக்கம் நகர்த்தி
முத்துக்கட்டுமானம் முறைதவறச் செய்கிறது
கன்னத்துச்சதை
குட்டிப்பிள்ளை கிறுக்கலாக அமுங்கிப்பிதுங்கி
தொங்க
புருவத்தின்மேல் கைவைத்து மறைத்துக்கொண்டு
யாரது என்கிறோம்
என்னைத் தெரியவில்லையா பெருசு
வயசு...
என்பேர் வயசு
எனும்போதோ
காதிரண்டும் துளைதானா

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...