ஞாயிறு, டிசம்பர் 05, 2021

பாப்பு பாப்புவாக இல்லாது ஆனாள்

 புதுசா கொஞ்சம்

சண்டை வளர்க்க
புதுசா புடவை வாங்க
புதுசா கொஞ்சம் பெருமை பேச
புதுசா கடன் வாங்க
ஏதாச்சும் ஒண்ணு வேணும்
இப்போ இது
பாப்புதான்
புதுசா என்ன தொல்லை இதுங்குறா
அம்மா ஆயிரம் ஏற்பாடுகளுக்கு நடுவே
நாப்கினை
நீட்டியபடி சொல்கிறாள்
இப்படிதான்
நான் குழந்தையா இருக்கும்போது....
சற்று மௌனமாகித் திருத்திக் கொண்டாள்
சாரி பாப்பு
உன்னை இனி குழந்தைன்னு சொல்ல விட மாட்டாங்க
பத்துவயசுதான் உனக்கு
ஆனாலும்...

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...