ஞாயிறு, டிசம்பர் 05, 2021

முட்டக்கண்ணி கதை

 அவளிடமும் இருந்தது

ஒரு மஞ்சள்சேலை

முட்டகண்ணி பானுப்பிரியா போல
ஒற்றையில் வழியவிட்டு கூந்தலை உலர்த்தியபடி
கொல்லை தென்னை மரத்தைக் கட்டிச்சுழல ஆசையும் இருந்தது
ஈற்று நின்ற கிழப்பசுவை அந்த தென்னையிலும்
அவளை
அடுத்த ஊரிலும்
கட்டிவைத்தார்கள்
அந்த மஞ்சள் நைலக்ஸ் சுருங்கி மேலேறியும் மறக்காமல் முந்தானையை இழுத்துச் செருகியபடி
அங்கு ஒரு தென்னம்பிள்ளைக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டிருந்தாள்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...