ஞாயிறு, டிசம்பர் 05, 2021

பால காண்டம்

 முழங்கையில் நீர் வழிய

கடிக்கும் தர்பூசணித் துண்டை
வேடிக்கை பார்க்கும் எவரிடமும் காட்டி
வேணுமா எனக் கண்ணாலோ
தலையசைப்பாலோ
கேட்டுக்கொண்டிருந்த குழந்தை
இவ்வருடம் யாரையும் பார்க்காது
உறிஞ்சி உறிஞ்சி தின்று கொண்டிருக்கிறது

ரஃப் நோட்டின் தாள் கிழித்து
கொய்யாக்காயை கிடைத்த கல்லால் நசுக்கி
துக்குளி துக்குளியாய்ப்
பங்கிட்டுக் கொண்டிருந்த நான் எந்த வயதில்
கடித்துத் தின்ன ஆரம்பித்தேன்
நினைவில்லை

பாலகாண்டங்கள்
திடீரென்று முடிந்துவிடும் போல

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...