வியாழன், டிசம்பர் 09, 2021

கட்டுக்குள்

 என்னா வெயிலு

என்றபடி
கீரைக்கட்டுகளின்மேல்
தண்ணீரைத் தெளிக்கிறாள்
அந்த லோட்டாவை வாங்கி
அவள் வாடிய முகத்தின்மேல் தெளிக்க மாட்டோமா என்றிருக்கிறது
மனசுக்குள்
வாய்
இருவத்தஞ்சா அநியாயமால்ல இருக்கு என்கிறது
அடங்காப்பிடாரி
*******************************************************
ஒரு உழக்கு பாலின்
வெண்மை தளர்ந்த சாடையின் இறுதிக்கோட்டைத்தொடுமளவு
விளாவிய தேநீரை
அளந்து அளந்து எல்லோருக்கும் தந்தபிறகான
வண்டலைக் குடித்தே பழகிய அம்மா சொல்கிறாள்
எனக்கு சூடே ஆவறதில்ல என்று
ஏட்டையாவது எடுத்துப்போடு
அப்புறம் அதற்கொரு சாக்கு கண்டுபிடிக்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...