ஞாயிறு, டிசம்பர் 05, 2021

நீலக்கோடு நீங்கிய புலனம்

 அழகருக்கென்ன

செயற்கை ஆறு வெட்டவாவது ஆளிருக்கிறது
சித்திரை நிலா
அண்ணாந்து பார்க்க கண்ணில்லாத கொடுமையில் ஒளிந்து கொள்ள இல்லாத மேகத்தைத் தேடுகிறது
காய்ச்சல் சளி இருமல் மூச்சு
ஆக்சிஜன்
ஊசி கஷாயம் என்றே பேசுகிறோமே
ஏம்பா நான் சரியாத்தான் பேசுறேனா
என்றாள் அவள்
ஒரு மனுஷியாட்டம் பேசறே
சொல்லிவிட்டு
அடுத்தவீட்டு மாடிக்குப் போகிறது நிலா
******************************************************
ரெண்டு கீத்து மாங்காய்
உப்பும் காரமுமாக
அது அது அவ்வளவுதான்
அன்புன்னா
கூடத்தான் ***********************************************
அழுத்தம் அழுத்தம்
அம்முகுளி என்றிருப்பாள் ஆத்தா
உன்னைப் பார்த்திருந்தால்
நீ பார்த்து விட்டாய்
என்பதை
நான் பார்த்துக்கொள்ள
உதவிய நீலத்தைக்கூடவா
அழித்துவிட வேண்டும்
நீலத்தை அழித்துவிட்டால்
வானத்திலாவது வெள்ளை இருக்கும்
வாட்சப்பில் என்ன இருக்கிறது

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...