வியாழன், டிசம்பர் 09, 2021

கருணை மதிப்பெண்

    பொதுவில்தான் கிடக்கிறது

கொஞ்சிய
வெம்பிய
கசந்து துப்பிய அத்தனை சொல்லும்
என்
மௌனம் பீதியுடன்
பார்த்துக்கொண்டிருக்கிறது
எதை எடுக்கப்போகிறாய் என்று
உன் மௌனமும் ரகசியமாக ஓடிவந்து எனக்கும் எனக்கும் என்கிறது ***************************************
ஒருநாளுக்கொன்றென
பொன்முட்டை விதியையாவது
பின்பற்றக்கூடாதா விதியே
விவரமறியாச் சிறுபிள்ளையா
மனநலம் பிறழ்ந்த
பேதையா
எல்லா எண்களையும் வளைத்து உருட்டி பூச்சியமாக்கித்
தூரப்போடுகிறாயே
கருணை மதிப்பெண் தந்து காற்றுக்குத் தொண்ணூற்றைந்து தரப் பழகு
என்று எத்தனை கோரிக்கை வைப்பது
********************************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...