திங்கள், டிசம்பர் 06, 2021

யாரோ மணி அடிக்கிறார்கள்

 கடைகளின் ஷட்டர்கள் மேலேறும் ஒலி

தடதடவென இருக்கைகள் ஆடும் பேருந்துகளின் ஒலி
கூட்டத்துக்கிடையே உறுமிக்கொண்டே இருக்கும் வாகனங்களின்
ஒலிப்பான்கள்
அச்சமாயில்லையா
இன்னும் கொஞ்சம் அழுகை
இன்னும் கொஞ்சம் இழப்பு
இன்னும் கொஞ்சம் பரிதவிப்பு
விளையாட்டுக்காக யாரோ இரும்பு தண்டவாளத்தைத் தட்டிவிட்டாலும்
பையைச் சுழற்றிக்கொண்டு ஓடும்
வயதிலிருந்து வளரவேயில்லையா *************************************************************
அறிவேன் புத்தனே
எந்த அஞ்சறைப்பெட்டியிலும்
அந்தக்கடுகு இல்லையென்று
ஆயினும்
அழாதே துயர்கொள்ளாதே என்று ஆணிவேர் அறுந்த இலைகள் புரிந்துகொள்ள வேண்டுமென்பது உன் பாஷையில்
பேராசை
காலங்கடந்து நிற்கும் கல்மரமல்ல நாங்கள்
வேர்பிடித்து நிமிரவாவது வரம் கொடு

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...