புதன், செப்டம்பர் 30, 2020

அன்பின் உண்டியல்

 இதுவரைக்கும் நடக்காததெல்லாம் நடக்கிறது இன்று விரிந்து பூத்திருக்க வேண்டிய அரை ரோஜாவை நேற்றிரவு ஏதோ கடித்துவிட்டது அணிலா எலியா என்ற வாதம் எங்களுக்குள்


*******************************************

மறந்துபோன மனிதர்களெல்லாம் அழைக்கிறார்கள்
பத்திரமாயிருக்கச்சொல்லி
குறுஞ்செய்தியாவது
அனுப்புகிறார்கள்
ஒரு தும்மல் வரும்வரை
கிடைக்கும் அன்பையெல்லாம் சேர்த்துவைக்கும் உண்டியல் இருக்கிறதுதானே

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...