ஞாயிறு, செப்டம்பர் 27, 2020

அவள் முகம்

 அவளுடைய தேநீர்க்குவளையை நமது அபிப்ராயங்களால் நிரப்பாது இருப்போமாக

கண்ணுக்குத் தெரிவது
குவளையின் பூவேலைப்பாடுகள்
குழந்தைபோல் ஏந்தியிருக்கும் பாங்கு
மற்றும்
முகம்

*****************************************************
அதன்போக்கில் நகரும் நிலவை
மறைக்க வந்துவிடுகிறது
ஒற்றைமரம்
கிளையிடுக்கில் சிக்கிவிடாது
விடுவித்து மேலெழுகையில்
மறைக்கப் போதுமாயிருக்கிறது
மொட்டைமாடிகளின்
சின்டெக்ஸ் தொட்டித்தொடர்
************************************************
முகம் பார்க்காது திரியும் நாட்களிலும்
சுணங்க வைத்த
உன்சொல்லைச் சொல்லும்
எவர் குரலிலோ
எட்டிப் பார்த்துவிடுகிறாய்

**********************************************

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...