புதன், செப்டம்பர் 30, 2020

இருங்கள்

 நான் இருக்கிறேன் பசியோடு

நான் இருக்கிறேன்
நடுங்கும் மனதோடு
நான் இருக்கிறேன்
கடும்வேலைகளோடு
நான் இருக்கிறேன்
வேலையேதுமற்று
நான் இருக்கிறேன்
சொற்களற்று
நான் இருக்கிறேன்
கொதிப்போடு
நான் இருக்கிறேன்
வாதைகளோடு
நான் இருக்கிறேன்
யோசனையோடு
இருக்க வாய்த்திருக்கிறதே
எங்களைப்போல்
எவனும்
இழிசொற்களால் வாழ்வைக் குதறாவண்ணம்
இருங்கள் எப்படியேனும்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...