வியாழன், செப்டம்பர் 24, 2020

நிரம்பிய நீ

 எனது சிலுவையாகவும்

எனது அப்பமாகவும்

எனது வில்லாகவும்

எனது இலக்காகவும்

எனது பூவாகவும்

எனது முள்ளாகவும்

எனது அதிதியாகவும்

எனது எதிரியாகவும்

நீயே நிரம்பிக்கொண்டால்

எனது நானாக

நானிருக்கவும் கூடுமோ

  

 

 

 

 

மன்னிப்பைக் கோருவதற்காக
நீ அலையாத வனாந்தரங்கள் தோறும்
எப்படியாவது கையளித்துவிட
மன்னிப்பைச் சுமந்தபடி அலைந்து கொண்டிருக்கிறேன்
ஏன்
அது வேறு

என் முதுகுநோக்கிப் பாயும் அம்பாகத் துரத்துகிறது 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...