ஞாயிறு, செப்டம்பர் 27, 2020

குவளை ஈ

 நிலைப்படி தாண்டி ஒரு அணில் நாற்காலியின் கால்களுக்கிடையே உட்கார்ந்திருந்த காட்சி

ஏதோ புகைப்படமாக்கும் என நினைத்தது மனது
இரு நிமிடங்களில் திடுக்கிட்டேன்
அதுவும்
வாலை ஆட்டியபடி ஓடியபோது சிரித்தது போலிருந்தது
அவ்வளவா
வீடடங்கி விட்டேன் *********************************************
நம்பிக்கையோடு இரு
நம்பிக்கையோடு இரு
சரி
நடுங்கும் குரலில் அதைச்சொல்லாதே

******************************************
கைக்கெட்டும் தூரத்தில் தேநீர்க்குவளை
இடப்பாகமா
வலதா
எடுக்கப்போவது எது என்று ஏகப்பட்ட வாதம்
காலி குவளை சிரித்துக் கொள்கிறது
என்னால்தானோ என்றபடி பறக்கிறது விளிம்பில் இருந்த ஈ

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...