ஞாயிறு, செப்டம்பர் 20, 2020

இல்லாமற் போகவில்லை

 


வலிந்து சிரித்தல்
ஒற்றை அறைக்குள் நரகமான நாளில்
நீ முனைந்த முத்தம் 
அத்தனை கசப்பு
போதும் என 
மணிக்கட்டைத் தளர்த்திக்கொண்டபோது
புறங்கழுத்துக்குள்ளும்
தென்றல் புகுந்து எழுந்தது
தூரச்சிரிப்பு
தூரமுறைப்பு
நீதிமன்றங்கள் 
கூண்டுக்குள் வைக்கமுடியாத  
உறவு
கண்ணாடித்துகளை 
முறத்தில் அள்ளியபின்னும்
எங்கோ ஒன்று மினுக்குவதாகவே 
உற்று உற்று குனிந்து பார்க்கிறது
கதர்ப்பட்டு சேலையை 
ஞாபகமாக தூக்கிப்போட்டு விடவேண்டும்
அதன் புட்டாக்களுக்கு 
அவன் கண்ணாடியின் ஃபிரேம் ஜாடை

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...