ஞாயிறு, செப்டம்பர் 20, 2020

புகைப்படத்திலிருந்து ஒலிக்கும் குரல்

 

ஒருதலைராகம் நாயகிபோல
வி"கழுத்து வைத்த
ரவிக்கையுடன்
நால்வருமாக
முழங்கையோரம்
மறுகையைச் சார்த்திக்கொண்டு
நின்ற படம் இன்று கிடைத்தது

ஒற்றை மல்லிச்சரம்
கழுத்தில் வழிய
வீட்டில் எடுத்த மை
கண்ணுக்கு வெளியே இறங்க
சிரிக்கத்தெரியாமல்
புகைப்படம் எடுப்பவரையே
உற்றுப் பார்த்தபடி எடுத்த படம் 

நீலாமட்டும்
பிளாஸ்டிக் மணிமாலையில்
ஸ்டுடியோகாரர் கைவசம்
மூன்று டாலர்சங்கிலி மட்டுமிருந்ததால்

எப்போதும்
எனக்கென்று வரும்போதுதான்
எதுவும் போதாமல் போய்விடுகிறது
அன்றைய புலம்பல் கோட்டா
அதுவாக  முடிந்தது

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...