புதன், செப்டம்பர் 30, 2020

புன்னகையின் வால்

 உண்மைதான் மருந்து என்றார்கள்

ஒரு வில்லை போதுமா என்றேன்
குழைத்து விழுங்கு என்றாய்
உண்மைதான் மருந்து என்றார்கள்
ஒரு கரண்டி போதுமா என்றேன்
உள்ளுக்கு எடுப்பதல்ல என்றாய்
உண்மைதான் மருந்து என்றார்கள்
குழிக்கரண்டியிலிட்டுக் காய்ச்சியபடி
தேடுகிறேன்
எங்கே ஓடிவிட்டாய்


*********************************************
நினைவாக இருக்கட்டும் என்றொரு படமெடுத்தோம்
நீ அளந்து பொருத்த முயற்சித்த புன்னகையின் வால்
பார்க்கும்போதெல்லாம் கண்ணில் உறுத்துகிறது
ஒருவேளை பார்த்தால்
விளக்கம் ஒன்றும் தந்துவிடாதே

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...