வியாழன், செப்டம்பர் 24, 2020

ரௌத்திரசாந்தா

 

இந்தக் கதவிருக்கிறதே
கதவு
இரக்கமேயில்லை அதற்கு
பின்னால் உன்முகம் இருக்கும்போது திறக்காது
வரக்கூடும் என்ற நம்பிக்கை தரும்படியும்
அடைக்காது அழிச்சாட்டியம்
அப்படியே 
என்றொரு
கொண்டி ஆட்டம்

 

 

 

 

 

 

 

 

 

எது சாந்தம்
என்றொரு தேடலின்
பின்னே
கண்டுகொண்டேன்
கணகணவென்ற மணியோசையோடு
பம்பை உடுக்கை கொட்டி
இரக்கமின்றி ஆடவைக்கும் உன்னை
ரௌத்திரசாந்தா

 

 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...