வியாழன், செப்டம்பர் 24, 2020

சிலேட்டுப்பூ

 

ஒரு முட்டை

அதைச்சுற்றி ஐந்து வளையம்

கீழே ஒரு வளைகோடு

சற்று நீட்டியும் பார்த்தாள் பாப்புக்குட்டி

திருப்தியாகவில்லை

கோட்டை எச்சில்தொட்டு

அழித்துவிட்டு

பலகையின் அளவு

வளையங்கள் பெருக்கிக்கொண்டே போனாள்

அத்தாம்' பெரிய பூவின்

வாசனை தாங்கவில்லை

சிலேட்டுக்கு

 

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...