வியாழன், செப்டம்பர் 24, 2020

ஆஹாகாரம்

 

தெப்பத்தின் அடிக்கட்டையில்
நனைந்துகிடக்கும் மனதை
அறியாததுபோல
கிடைமட்டத்தில் நிறுவிக் கொள்கிறாய் 
இருவாசியும் பீடமும்
ஆபரணமும் அலங்காரமும்
ஒரே ஆஹாகாரம்
அழகு அழகு என்று

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஒருமுறைக்குப்
பத்து முறை
பத்துக்கு நூறுமுறை
யோசித்து உதிர்த்த
ஒரு சொல்
இப்போதும் அங்கேயேதான் கிடக்கிறது

உதிர்ந்த முருங்கைப்பூ போல

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...