புதன், செப்டம்பர் 30, 2020

கூட்டலும் கழித்தலும்

     என்ன காரணத்தாலோ தொடர்பற்றுப்போன நண்பரைத் தேடிப் பேசியதும்

ஒரு துண்டு ரொட்டியைத் தெருநாய்க்குப் போட்டதும்
அன்புக்கும் கருணைக்கும் அடையாளமென்று மனம் சொன்னது
இவங்கள்ளாம்
எப்படித்தான் இருக்காங்களோ
ஒரு துளி அன்பும் கருணையுமில்லாமல்
தீன கருணாகரா ************************************
பளிங்குபோலச் சலனமற்ற முகங்களோடு
சாவு செய்தியைச் சொல்பவர்களைப் பார்க்க அச்சமாகிறது
என்கிறாய்
உன் கையிலிருக்கும் தீனியைச் சிந்தாது
கவனமுடன் பார்க்க முடிகிறவரை
கூட்டிக்கழித்துப் பார் கணக்கு சரியாகத்தான் வருகிறது

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...