கொஞ்சம்போல் தண்ணீர்சிந்தியது
புதன், செப்டம்பர் 30, 2020
விரல்நுனிப்பூ
கூட்டலும் கழித்தலும்
என்ன காரணத்தாலோ தொடர்பற்றுப்போன நண்பரைத் தேடிப் பேசியதும்
அன்பின் உண்டியல்
இதுவரைக்கும் நடக்காததெல்லாம் நடக்கிறது இன்று விரிந்து பூத்திருக்க வேண்டிய அரை ரோஜாவை நேற்றிரவு ஏதோ கடித்துவிட்டது அணிலா எலியா என்ற வாதம் எங்களுக்குள்
*******************************************
இருங்கள்
நான் இருக்கிறேன் பசியோடு
புன்னகையின் வால்
உண்மைதான் மருந்து என்றார்கள்
வாழ்வு
லேசான
வெம்மை
லேசான
இருள்
கொதிக்காத
நெற்றியைத்
தொட்டுப் பார்த்துவிட்டு
சன்னல் வழி கை நீட்டு
சுட்டுவிரலால்
தொட முடிவதுதான் வானம்
சும்மா
பரிதவிக்காதே
அவரவர்
இருக்கிறார்கள்
அவரவர்
பக்கம்
சுட்டுவிரல்
நுனி வானத்தைச்
சற்றே உறிஞ்சு
சிறு
கீறல் ரத்தத்தை உறிஞ்சுவாயே
அது போல
அவ்வளவுதான்
வாழ்ந்துகொண்டுதானிருக்கிறாய்
ஞாயிறு, செப்டம்பர் 27, 2020
நீ நான் நடுவில் ஒரு ம்
அவ்வளவு நீளம் வரவில்லையென்றாலும் எப்படியும் எம்பிப் பிடித்து விடுவேன் விடுவதுதான் முடியவில்லை
************************************
குவளை ஈ
நிலைப்படி தாண்டி ஒரு அணில் நாற்காலியின் கால்களுக்கிடையே உட்கார்ந்திருந்த காட்சி
உடையும் வைரஸ்
எப்போதும் முச்சந்தியில்தான் நின்றுகொண்டிருந்தோம்
புலம்
அழுத்துவது எது என்றே விளங்காமல் ஆழக்குழிகளுக்குள் விழுவதும் தக்கி முக்கி ஏறுவதும் பின்னொரு மாயக்கரம் தள்ளுவதும்....
ஒன்றரை காக்கை
நூறு டிகிரி மட்டும் தெரியும் வானத்தில் இரண்டு காகங்கள் இல்லை ஒன்றரை
கூடக்குறைய முடியாத தூரம்
எப்படியும் உருட்டி உருட்டி
தனிமைக் காலம்
கைப்பிடிகளைப் பற்றாது கதவு திறக்கச் சொன்னாய்
தலைக்குள் மத்தாப்பூ
கொஞ்சம் சின்னதுதான் ஆனாலும் ஒரு காகிதக்குல்லாவை தலைமேல் பாவனையாக வைத்திருக்கையில் வந்துவிடுகிறது சற்றே பாப்புவின் சாயல்
பிராயத்தின் குழல்
சமுத்திரக்கரைகள் எப்போதும்போல கிளிஞ்சலுக்குள் சூரியனை அடைக்கப் பார்க்கின்றன
ருசி
ஒரு வெங்காய தோசை
எப்படி இருக்க வேண்டுமென
அவனுக்குத் தெரியும்
வெங்காய தோசை
விரும்பிக் கேட்பதும்
குறைபாடுகளைப் பட்டியலிடுவதும்
வழக்கமானது
பிறகொரு நாள் அவன்
உளுந்து வடை பற்றி
சொல்லத் தொடங்கினான்
அவ்வாறே ரசம் குறித்து....
சொல்வதில் உள்ள ருசி
தின்னுவதைவிட
அதிகம் என்ற ரகசியம்
அவளுக்குப் புரிந்தபோது
அவன் வடைகறி வகுப்பெடுத்துக்
கொண்டிருந்தான் வீட்டில்
பரிசாரகர்களைப் போலப்
பணிவோடு கேட்டுக் கொள்ள
அவளுக்கும் தெரிந்து விட்டது.
உக்கிரத்தின் நதிமூலம்
சுருள்பொட்டலமாகக் காத்திருக்கும் செம்பருத்தி வெண்ணிலவின் சிரிப்பினைக் காணாதும் பிரதி செய்து விடுகிறது மலர்ச்சியை
அவள் முகம்
அவளுடைய தேநீர்க்குவளையை நமது அபிப்ராயங்களால் நிரப்பாது இருப்போமாக
வியாழன், செப்டம்பர் 24, 2020
அம்மாவுக்கு எல்லாம் தெரியும்
நச்சு நச்சென அம்மியில் தேங்காய்ப் பத்தைகளை நசுக்கும் முன்னரே அம்மாவுக்குத் தெரிந்திருந்தது
தோள்வீடு
மனையின்
கீழ் போட
பூசைகளில்
சேர்க்கவென
வாங்க
முடியும்
படி
நெல்
எப்படி
அவித்து
அதே
வாசனையை நுகர
********************************************
எங்கள் தோள்வலி
அறிந்த பைகளுக்குள்
என்னவெல்லாம் உண்டெனக்
கேட்டானொரு நண்பன்
வேறென்ன போ
அதுவே எம் சின்னவீடு என்றேன்
காலண்டர் சாமிகள்
புதிய காலண்டர்களுக்கான
வேட்டையை
நடத்த டிசம்பர் பூக்களே
நினைவூட்டிவிடும் மாமாவுக்கு
சிலேட்டுப்பூ
ஒரு முட்டை
அதைச்சுற்றி ஐந்து வளையம்
கீழே ஒரு வளைகோடு
சற்று நீட்டியும் பார்த்தாள் பாப்புக்குட்டி
திருப்தியாகவில்லை
கோட்டை எச்சில்தொட்டு
அழித்துவிட்டு
பலகையின் அளவு
வளையங்கள் பெருக்கிக்கொண்டே போனாள்
அத்தாம்' பெரிய பூவின்
வாசனை தாங்கவில்லை
சிலேட்டுக்கு
கரிப்புமணி
உப்பாக இருப்பதென்று ஆனபிறகு
கைப்பிடியென்ன
மேசைக் கரண்டியென்ன
*******************************************
கடல் எத்தனை நீளம்
எத்தனை ஆழம்
எத்தனை வேகம்
இருக்கட்டும்
இன்று அளத்தில் உறைந்தாலும்
இருந்திருக்கிறேனே
அந்த நீளத்தில்
ஆழத்தில்
வேகத்தில்
அப்படித்தான் கரிப்பேன்
வாழ்ந்தா....
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
நேசத்துக்கு விளக்கவுரையை அவள் ரத்தத்தால் எழுதும் சமூகத்தின் விஷப்பிஞ்சு அவன் வெம்பும் வாழ்வுகளைப்பற்றி ஒருநாள் பேசிக்கலைவோம் கல்லெ...
-
அப்பா இல்லாத தீபாவளி அப்பா இல்லாத புத்தாண்டு அப்பா இல்லாத பொங்கல் இப்படித்தான் ஒவ்வொன்றாக வருகிறது அப்பா என்று மகன்களைக் குறிப்பிட்...
-
எப்படியோ முடிந்தது பிய்த்துப் பிடுங்கும் வறுமையிலும் தோடு மூக்குத்தியை ஆடை போல அடிப்படையாய்ப் பார்க்க அதனினும் கொடிதான பொழுதுகளில...