கூச்சமாக இருக்கிறது பட்ட காலிலே பட்டுக்கொண்டிருப்பவரிடம் இதுவும் கடந்து போகும் எனத் தத்துவம் சொல்லி நகர *********************************************
வியாழன், அக்டோபர் 08, 2020
வாழ்வின் சந்நிதானத்தில்
கிடுகிடுக்கும் சுவை
எல்லாம் என் தலையெழுத்து
என்ற முடிப்போடு
நீ நகர்ந்து விட்டாய்
அதில் என் எழுத்தின் பிரதி உண்டா
ஆராய்ச்சியிலிருந்து
மீளாத்திகைப்புடன்
நான்
செம்பாதி இல்லாவிடினும்
ஒவ்வொரு குவளையின் கசப்பையும்
பாகம் பிரித்துக்கொண்டதற்கு
பொருளிருக்கிறதா
உன் தலையெழுத்துக்குத்
தனி அடையாளம் சூட்டுகையில்
*************************************************
தஞ்சமடி தஞ்சம்
மழையே உன்னிடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்
ஹத்ரஸின் பாடல்
மகளின் முகம்
பார்க்க விட்டிருக்கலாமே மகராசனே
ஒரு கை மண்ணும்
கிடைக்கவில்லையே அவளுக்கு
அவர்கள் போய்விடுவார்கள்
நாங்கள்தான் இங்கு இருப்போம்
எலும்புகளை உடைத்தது
உங்களுக்கு வசதிப்படவில்லை என்றா
அவளுக்கு
வலித்தது போதவில்லை என்றா
நாக்கு இருந்தபோதெல்லாம் பேசிவிடுகிறோமா என்ன
அவர்கள் போய்விடுவார்கள்
நாங்கள்தான் இங்கு இருப்போம்
ஒருவன் மனைவியை மற்றவன் பார்க்காதே
என்கிற மதத்தையும் சாதியையும்
அப்போது மட்டும்
உடுப்புகளோடு கழற்றி
எறிந்து விடுவீர்களா மகராசன்களே
அவர்கள் போய்விடுவார்கள்
நாங்கள்தான் இங்கு இருப்போம்
ஆமாம் மகராசன்களே
அடுத்தடுத்த நாட்களில்
நடப்பதிலிருந்து அறிந்து கொள்கிறோம்
நீங்கள்தான் இங்கு இருக்கிறீர்கள்
காந்தி அழைப்பு
எப்போதையும்விட
இப்போது நீ தேவைப்படுகிறாய்சத்தியத்தின் உறுதியைப் பெற்றுதான்
எழுந்து நடமாட வேண்டும்
என்னை அப்படியே வழிபடு என்று
சாட்டை சுழற்றாத
முன்னோடியைத் தேடுகிறோம்
தன் தவறுகளை ஒப்புக்கொண்டு
பரிசோதனைகளைப் பகிர்ந்து கொண்டு
அதிகாரத்தினால்
வாள் பாய்ச்சாத தலைவனைத் தேடுகிறோம்
சந்தேகமாகதான் இருக்கிறது
நவநாகரீக ஆடையணியாமல்
தொடர்ந்து பொய்யுரைக்காமல்
பேதங்களை ஊதிப்பெருக்காமல்
இருக்கும் உன்னை எங்களுக்கு
அடையாளம் தெரியாமல் கூட இருக்கலாம்
உன்னை பிரமோட் செய்ய
நிறுவனங்கள் உண்டா
தொலைக்காட்சி அரங்குகளில்
கண்மூடிக்கொண்டு கத்துவதற்கான
ஆள்பலம் உண்டா
இரண்டு வருடங்களுக்குள்
இன்னோவா தரமாட்டாயே நீ
ஏதாவது செய்வாய்
ஏதாவது தருவாய்
என்ற ரகசிய ஒப்பந்தங்கள் இல்லாது
வாய்மை அகிம்சை
என்ற வார்த்தைகளை நம்பி
கல்வியை,தொழிலை,
குடும்பத்தை விட்டுவிட்டு
நடப்பதற்கான கூட்டமாக
நாங்கள் இல்லை என்பதையும்
தெரிந்துகொண்டு ஏதாவது செய்
படம் :ஓவியர் ஆதிமூலம்
கடன்களின் கூட்டுவட்டி தள்ளுபடி
ஒரு கல் குறைவான தித்திப்பு
சின்ன பூக்களை
எனாமல் ஆபரணம்
பட்டை கொலுசை மறுத்தது ஆத்தாவுக்கு துக்கம்
அழுவதை நிறுத்திவிட்டேன் எஸ் பி பி
பாடும் நிலாவின் கிளிகள்
உன் தோளில் தொற்றிய கிளியாகத்தான்
இருந்தோம் போல
மழைதருமோ என்மேகம் எனப்பாடிய
நாயகனை விட்டு
ஒரு சின்னப்பறவை அன்னையைத்தேடி
வானில் பறக்கிறது
என ஓடிய பிம்பத்தைவிட்டு
தேன் சிந்துதே வானம் உனை எனைத்
தாலாட்டுதே என்றதும்
உன் குழைவுக்கும்
சின்ன சிரிப்போடு பறந்த
சிறிய பறவைகள் கூட்டம்
அடிமைகள் ஆனது
ரகசியக்குரலில் பியூட்டிஃபுல் என்றுவிட்டு
நீ
அடுத்த வரிக்குப்போக
நகர முடியாது சுழலும் மனங்களோடு
வாழ்ந்துவிட்டுப் போவோம்
எம் காதலனே

உயிருக்குத்தான் பிரிவு
உன் குரலுக்கல்ல
புதன், அக்டோபர் 07, 2020
மாத்திரை
பிரியமிருந்திருக்கலாம் பார்வையிலும் சொல்லாது போனவற்றை பல்லாங்குழிச் சோழி போல இப்போது எதற்கு இட்டு அள்ளி இட்டு அள்ளி ************************************
கண்ணாடிகள்
நீங்கள் பிறந்த மாதம் சொல்லுங்கள்
தூரத்தில் வேர் நுனி
புதிய பசிய கறிவேப்பிலையை ஈர்க்கிலிருந்து சரசரவென உருவி கொழுந்துமல்லித் தழைகளையும் சேர்த்துக் கொதிக்கும் ரசத்தில் போடும் கையா
நாஸ்டால்ஜிக் உடைமை
எப்படி இருக்கிறாய்
அவியும் நினைவு
யாரைப்போல இருக்கிறோம் பச்சைப் பிள்ளையாக இருந்தபோதாவது யாருக்கேனும் தெரிந்தது
****************************************
யாரைப்போலவும் இருக்க வேண்டாம் உதறி உதறி உதறிய வேகத்தில் யாருக்காவது தோன்றி விடுகிறது எங்கோ விழுந்த உதறல் ***************************************
உடையும் எழுத்தாணி
வீட்டை விற்று
தனியாக இருக்கிறாயா
அவசரமாக மூக்கை உறிஞ்சிக் கொள்வதைக் கவனித்து கைக்குட்டையை நீட்டும்
பாப்பூ -2
பேசவைத்து
பூப்பூவாய், ரிப்பன் கட்டி, வழுவழு சாட்டினில் குய்ங் குய்ங்கென அடிவைக்குந்தோறும் கூவும்படியாக விதவித காலணிகள் இருந்தாலும் அம்மாவின் பாதணிக்குள் ஏறி நடக்கத்தான் பாப்புவுக்குப் பிடிக்கிறது
பாப்பூ -1
தினமும்
சன்னலுக்கு வரும் காகத்துக்கு
ஒரு
பிடி சோறு வைத்துப் பழகிய
பாப்பு
காக்காஃபிரெண்டாக
சொல்லிக்
கொடுக்கிறாள்
பக்கத்துவீட்டுத் தோழனுக்கு
*************************************
பிரௌன் நிறத்தை
அரைத்தீற்றலாக இழுத்து வைத்த பாப்பு
அங்குமிங்கும் குனிந்து நிமிர்ந்து
தேடிக்கொண்டிருந்தாள்பச்சை பென்சிலைக் காணோமாம்
பிரௌன் மண்ணில்
செடி எப்படி முளைக்கும் விசனத்தோடு
தேடல் தொடர்கிறதுஅங்குமா
அலுத்துக்கொண்டார் தாத்தா
************************************************************
அந்நியயப்பொழுதுகள்
பிரியமாக இருந்த பொழுதின் சாட்சி என்று எதைச்சுட்ட?
வாழ்ந்தா....
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
நேசத்துக்கு விளக்கவுரையை அவள் ரத்தத்தால் எழுதும் சமூகத்தின் விஷப்பிஞ்சு அவன் வெம்பும் வாழ்வுகளைப்பற்றி ஒருநாள் பேசிக்கலைவோம் கல்லெ...
-
அப்பா இல்லாத தீபாவளி அப்பா இல்லாத புத்தாண்டு அப்பா இல்லாத பொங்கல் இப்படித்தான் ஒவ்வொன்றாக வருகிறது அப்பா என்று மகன்களைக் குறிப்பிட்...
-
எப்படியோ முடிந்தது பிய்த்துப் பிடுங்கும் வறுமையிலும் தோடு மூக்குத்தியை ஆடை போல அடிப்படையாய்ப் பார்க்க அதனினும் கொடிதான பொழுதுகளில...