வியாழன், அக்டோபர் 08, 2020

பாடும் நிலாவின் கிளிகள்

 உன் தோளில் தொற்றிய கிளியாகத்தான்
இருந்தோம் போல


மழைதருமோ என்மேகம் எனப்பாடிய
நாயகனை விட்டு

ஒரு சின்னப்பறவை அன்னையைத்தேடி
வானில் பறக்கிறது
என ஓடிய பிம்பத்தைவிட்டு
தேன் சிந்துதே வானம் உனை எனைத்
தாலாட்டுதே என்றதும்
உன் குழைவுக்கும்

சின்ன சிரிப்போடு பறந்த
சிறிய பறவைகள் கூட்டம்

அடிமைகள் ஆனது

ரகசியக்குரலில் பியூட்டிஃபுல் என்றுவிட்டு
நீ
அடுத்த வரிக்குப்போக
நகர முடியாது சுழலும் மனங்களோடு
வாழ்ந்துவிட்டுப் போவோம்

எம் காதலனே
❤️
உயிருக்குத்தான் பிரிவு
உன் குரலுக்கல்ல 

1 கருத்து:

Unknown சொன்னது…

மிகவும் அருமை!!!

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...