வெள்ளி, அக்டோபர் 02, 2020

படிப்பறிவு

     குழந்தைகள் என்ன செய்வார்கள் குழந்தைகள் என்ன செய்வார்கள் பார்

என்ன பதட்டமென்றாலும்
சொன்னதையே சொல்கிறாய்
சொன்னதைச் சொல்லாதவர்கள் வசம்
குழந்தைகள் இருக்கிறார்கள்.
குழந்தைகளை என்ன செய்வார்கள்
என்று கேட்டால்
உன்னை என்ன செய்வார்கள் என்ற கவனத்தோடுதானே கேட்கிறாய்
குழந்தைகள் என்ன செய்வார்கள் என்று
நீ
கேட்டுக் கொண்டிருக்கும்
இந்தக் கேள்வி எதிரொலிக்கும் மலையுச்சியில்
கூர்நகங்களின் இடுக்குகளில் தொங்கிக் கொண்டிருக்கும்
குழந்தைகளின் காதில் விழுந்து மட்டுமென்ன


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...