புதன், அக்டோபர் 07, 2020

அவியும் நினைவு

      யாரைப்போல இருக்கிறோம் பச்சைப் பிள்ளையாக இருந்தபோதாவது யாருக்கேனும் தெரிந்தது

****************************************

யாரைப்போலவும் இருக்க வேண்டாம் உதறி உதறி உதறிய வேகத்தில் யாருக்காவது தோன்றி விடுகிறது எங்கோ விழுந்த உதறல் ***************************************

புழுக்கிய நெல்லாக
திராவிக் கொண்டிருக்கிறேன்
நினைவுகளை
அவித்த வாசம் போச்சு
கொஞ்சம் ஈரம் மிச்சம்
*****************************************
எதற்காகவோ
யாருக்காகவோ
சொற்களை
விழுங்கி
சொற்களைத் துப்பி
விழுங்கி
துப்பி
இலையுதிர் காலமே....

********************************
எனக்கு புல்வெளி
உனக்கு
மேய்ச்சல் நிலம்
அவனுக்கோ சதுரமீட்டர்
கிண்டியபடி
நகரும் கோழி
இங்கே
வருவதேயில்லை
*******************************
ரகரகமாய்க்கட்டத்
தெரிந்து கொண்டேன்
ஒருமுறை கூடப்
பூக்கும் தருணம் தெரியவில்லை
அரும்பாகத்தான்
கிடக்கிறது
கடை மேடையில்



கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...