புதன், அக்டோபர் 07, 2020

மாத்திரை

 பிரியமிருந்திருக்கலாம் பார்வையிலும் சொல்லாது போனவற்றை பல்லாங்குழிச் சோழி போல இப்போது எதற்கு இட்டு அள்ளி இட்டு அள்ளி ************************************

கொலோனில் நனைந்த கைக்குட்டையோடு
முடிந்துவிட மறுக்கிறது காய்ச்சல்
அது பற்றுக்காக என்று புரிய வரும்போது
ஒற்றை மாத்திரையை நீட்ட மாட்டாய்தானே *****************************************
என்னவோ உறுத்துகிறதே
அட தளராடையைத் திருப்பிப் போடுகிறேன்
மாற்றியாயிற்று
கண்டுபிடிக்கவும்
மாற்றிப்போடவும்
இப்படி முடிந்தால்
எவ்வளவோ உறுத்தல் சரியாகியிருக்கும் ************************************
உரச்சாக்குகளை இழுத்துத் தைத்து
கூரைக்குள் திணிக்கிறவனிடம்
கைநீட்டி யாசகம் கேட்கும் மழைதான் இதோ உங்கள் குரோபேகில் இறங்காமல் வழிகிறது

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...