வியாழன், அக்டோபர் 08, 2020

ஹத்ரஸின் பாடல்

 


மகளின்  முகம் பார்க்க விட்டிருக்கலாமே மகராசனே
ஒரு கை மண்ணும்
கிடைக்கவில்லையே அவளுக்கு

அவர்கள் போய்விடுவார்கள்
நாங்கள்தான் இங்கு இருப்போம்

எலும்புகளை உடைத்தது
உங்களுக்கு வசதிப்படவில்லை என்றா
அவளுக்கு
வலித்தது போதவில்லை என்றா

நாக்கு இருந்தபோதெல்லாம் பேசிவிடுகிறோமா என்ன

அவர்கள் போய்விடுவார்கள்
நாங்கள்தான் இங்கு இருப்போம்

ஒருவன் மனைவியை மற்றவன் பார்க்காதே
என்கிற மதத்தையும் சாதியையும்
அப்போது மட்டும்

உடுப்புகளோடு கழற்றி
எறிந்து விடுவீர்களா மகராசன்களே


அவர்கள் போய்விடுவார்கள்
நாங்கள்தான் இங்கு இருப்போம்

ஆமாம் மகராசன்களே
அடுத்தடுத்த நாட்களில்
நடப்பதிலிருந்து அறிந்து கொள்கிறோம்

நீங்கள்தான் இங்கு இருக்கிறீர்கள் 


கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...