புதன், அக்டோபர் 07, 2020

உடையும் எழுத்தாணி

     வீட்டை விற்று

மனையை விற்று
வயலை விற்று
மொத்தமும் பணமாக கட்ட வேண்டுமெனச்சொல்லும்
எந்த சன்னலுக்கு முன்னாலும் நிற்கத் திராணியற்ற
தாய் தகப்பனுக்குப் பிறந்த
கல்லூரி விடுப்பில்
நடவுக்குப்போன
செங்கல் சுமந்த
பொட்டலம் கட்டிய
மருத்துவர்களையும்
பொறியாளர்களையும்
அறியப்போவதில்லையா
அடுத்த தலைமுறை
பிள்ளை படித்த எழுத்து
அப்பனுக்கு சட்டை போட
செருப்பு போட
உரிமையளித்ததெல்லாம்
பழங்கதையா
அரசின் காலணி
அரசின் சீருடை
அரசின் சோறு
தந்து ஆளான பிள்ளைகளை
பச்சை மசிப்பேனாவோடு
பார்க்கப் பொறுக்கலையா
என்னோடு தெருவில் நிற்கும்
உனக்கும் தெரியாமல்
உன் துணியை இழுத்துவிட்டு
அதுதான் சிறப்பென்று உன்னையே கைதட்டவைக்கும்
அழும்புதான்
தாங்கவில்லை

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...