புதன், அக்டோபர் 07, 2020

அந்நியயப்பொழுதுகள்

 பிரியமாக இருந்த பொழுதின் சாட்சி என்று எதைச்சுட்ட?

நாம் பகிர்ந்த பரிசுகள்?
உடைகள்?
தொடுகைகள்?
முத்தங்கள்?
உரையாடல் பாதையை அழித்தபின் இவற்றுக்கென்று
ஒரு குரல் இருக்கிறதா என்ன?
இப்பொழுது நீயும் எனக்கு கோடானுகோடி மற்றவரில் ஒருவர்
ஆனால் நானுமே எனக்கு
யாரோவாகி அச்சுறுத்தும் பொழுதுகளைத்தான் என்ன செய்ய

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...