வியாழன், அக்டோபர் 08, 2020

தஞ்சமடி தஞ்சம்

 மழையே உன்னிடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்

இரவிடம் தஞ்சம் புகுந்துள்ளது உனக்குப் புரியவில்லையா
சற்றே பேசாமலிரு
சன்னலில் வழிகிறாய் என்பது தெரியும்போது
குற்றமிழைத்தது போலத் திடுக்கிடுகிறேன்
என்னை வீட்டுக்கு வெளியே விட்டுப் பூட்டிவிட்டதான
திடுக்கிடல் அது
யாராவது ஒரு அதிர்ச்சி தகவலைச் சொல்லிக் கண்தளும்ப வைத்துவிடுவது
ஒரு மணிக்கு ஒருமுறை நடந்துவிடும் இந்நாட்களில்
அவர்களெல்லாம் உறங்கப் போயிருக்கும் இந்நேரத்தை எனக்கு அருள மாட்டாயா
எங்கே நல்லிரவு சொல் பார்க்கலாம்

கருத்துகள் இல்லை:

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...